எழுதிய கடிதம்

இடுகையிட்டது dinesh ஞாயிறு, 14 ஜூன், 2009

ஆர்வம் அலை பாய
ஐன்னலின் கதவிடுக்கில்
சந்தித்து படித்த
நேற்றைய செய்தித்தாள்
இன்றைக்கு பழசு.

அன்பானவளே......
பத்தாண்டுகளுக்கு முன்
செப்டம்பர் ஐந்தில் நீ
எழுதிய கடிதம்
இன்றைக்கு புதுசு..

எப்படி மறப்பேன்

இடுகையிட்டது dinesh புதன், 6 மே, 2009

எல்லா ஊதுபத்தியும்
எரிந்த பிறகும்
அட்டை பெட்டியில்
ஒட்டி இருக்கிறது
ஊதுபத்தி வாசம்

பூக்கள் எல்லாம்
பறிக்கப்பட்ட பிறகும்
பூங்காவில் தவழ்கிறது
பூ வாசம்

எத்தனைமுறை
கழுவினாலும்
எண்ணை பசை
சுமக்கிறது,நேற்றைய பொழுதில்
ஏற்றிய தீபம்

எல்லாவற்றிலுமே
இருக்கின்றன
பழைய நினைவுகளின்
பதிவுகள்

மணமாகி விட்டதால்
மறந்துவிடு
என்கிறாயே
எப்படி மறப்பேன்
நான் மட்டும்
உன்னை?